ராமர் பாலத்தை இடிக்காதீர்கள்- சு.சுவாமி
சென்னை:சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சுவாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திரேதாயுதகத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது ராமர் பாலம். இந்தப் பாலத்தை சேது சமுத்திரக் கால்வாய்க்காக107 டன் எடையுள்ள துரப்பணக் கருவியைக் கொண்டு இடித்துள்ளனர்.
ஆனால் அந்தக் கருவி உடைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பாலத்தை தொடர்ந்து இடிக்க முற்பட்டால்சேது சமுத்திரத் திட்டத்திற்கே ஆபத்து ஏற்படும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
ராமர் பாலத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக யுனெஸ்கோவிடம் மனுஅளிக்கப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. வருகிற ஜூன் மாதம் நியூசிலாந்தில் நடைபெறும்யுனெஸ்கோ மாநாட்டில் இந்தக் கோரிக்கை ஏற்கப்டும் எனத் தெ>கிறது.
எனவே ராமர் கட்டிய பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும். இதில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications