பிப். 8ம் தேதி திருப்பதி பிரம்மோத்சவம் தொடக்கம்
திருப்பதி:திருப்பதியில் பிப்ரவரி 8ம் தேதி முதல் பிரம்மோத்சவ விழா தொடங்குகிறது. 9 நாட்களுக்கு இது நடைபெறும்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பிரம்மோத்சவ விழாக் குழு வெளியிட்டுள்ள தகவல்:
சீனிவாசமங்காபுரம், கல்யாண வேங்கடேஸ்வரா கோவிலில் பிப்ரவரி 8ம் தேதி முதல் பிரம்மோற்சவம் துவங்குகிறது. ஒன்பதுநாட்கள் இந்த விழா நடைபெறும்.
பிப்ரவரி 8ம் தேதி துவாஜாரோனம் எனப்படும் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் தொடங்கும். கருட வாகனத்தில் உற்சவமூர்த்தியான கல்யாண வேங்கடேஸ்வரர், தேவி மற்றும் பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அடுத்த நாள் கஜ வாகன சேவையும், பிப்ரவரி 15 ம்தேதி ரதோத்சவம் எனப்படும் திருத்தேர் வைபவமும் நடைபெறும். அடுத்தநாள் சக்ராஸன சேவையும் நடைபெறுகிறது.
இத்துடன் பிரம்மோத்சவம் முடிந்து, மாலையில் துவாஜாவாரோனம் கொடி இறக்கப்பட்டு விழா முடிவடையும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தினங்களில் திருப்பதி தேவஸ்தானம், தர்ம பரஸார, அன்னமாச்சாரியா குழு, தாஸா தாகித்யா குழு ஆகியவைசேர்ந்து ஹரிகதா, கோலாட்டம் மற்றும் பஜன் சங்கீர்த்தனை ஆகியவற்றையும் வழங்கவுள்ளன.












Click it and Unblock the Notifications