ஓடும் ரயிலில் பிரவுசிங்-இந்திய ரயில்வே திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:நாடு முழுவதும் 250 ரயில் நிலையங்களில் இன்டர்நெட் மையங்கள்அமைக்கப்படவுள்ளன. மேலும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிநவீனவயர்லெஸ் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில்டெல் கார்பரேஷன் இந்த வசதிகளைஏற்படுத்தவுள்ளது. முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் சதாப்தி, ஜனசதாப்தி,ராஜ்தானி ஆகிய ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.

இதுகுறித்து மேற்கு ரயில்வே மண்டல மேலாளர் சத்யபிரகாஷ் கூறுகையில், இதன்மூலம், ஓடும் ரயிலில் இன்டர்நெட், வீடியோ கான்பரன்சிங், சாட்டிங் செய்ய முடியும்.இதனால் ரயில்வே வருமானமும் அதிகரிக்கும். எனவே இந்த வசதிகளை அளிக்கமுடிவெடுத்துள்ளோம்.

பயணிகளுக்கு தடையற்ற தகவல் தொடர்பு வசதிகள் கிடைப்பதுடன், வயர்லெஸ்இன்டர்நெட் வசதியால் பயணிகள் லேப்டாப்பையும் இயக்க முடியும்.

மும்பையில் சத்ரபதி சிவாஜி, சர்ச்கேட், மும்பை சென்ட்ரல், தாதர் போன்ற ரயில்நிலையங்களில் முதலில் அறிமுகப்படுத்தி, அதன் வரவேற்பை பொறுத்து நாட்டின்மற்ற முக்கிய ரயில் நிலையங்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்றார்.

இந்த புதிய வசதிகள் குறித்து ரயில்டெல் நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,இத்திட்டத்தின் மூலம் 500 முக்கிய ரயில் நிலையங்கள் அதிநவீன வயர்லெஸ்இன்டர்நெட் வசதியை பெறும். 250 ரயில் நிலையங்களில் இன்டர்நெட் மையங்கள்அமைக்கப்படும்.

இதற்காக ரயில்களில் டிரான்ஸ்மீட்டர்கள், ஆன்டனாக்கள் பொருத்தப்படும். ரயில்நிலையங்களிலுள்ள டவர்களிலிருந்து, ரயிலில் சென்றபடி தடையின்றி இன்டர்நெட்வசதியைப் பெறலாம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+