திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஐடி பார்க்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சியை அடுத்த நாவல்பட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க எல்காட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் எல்காட் நிர்வாக இயக்குனர் உமாசங்கர் கூறியதாவது,
திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் நாவல்பட்டு என்ற இடத்தில் ஐடி பார்க்குக்காக 135.04 ஏக்கர் நிலம்ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் சதுர அடியில் கட்டடங்கள் கட்டப்படும். மேலும் இந்தப் பகுதியைஎல்காட் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கவுள்ளது. இதனால் இங்கு அமையும் நிறுவனங்களுக்குவரிச் சலுகை கிடைக்கும்.
விமான நிலையத்திற்கு அருகாமையில் நாவல்பட்டு அமைந்துள்ளது கூடுதல் வசதியாதும். மேலும் எதிர்காலத்தில்விரிவுப்படுத்துவதற்கும் ஏற்றவாறு இந்த இடம் அமைந்திருக்கிறது.
அரசு அங்கீகாரம் பெற்ற பின், எல்காட் நிறுவனம் நிர்மான பணிகளை துவங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications