தமிழகத்துக்கு உலக வங்கி ரூ.2182 கோடி கடன்
வாஷிங்டன்:தமிழகத்தில் விவசாய உற்பத்திப் பணிகளுக்காக ரூ. 2,182.50 கோடி கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல்அளித்துள்ளது.
63 பாசன பகுதிகளில் 6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலுள்ள நீர்ப்பாசன கட்டமைப்புகளை நவீனப்படுத்தவும்,ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் இந்த நிதியை உலக வங்கி வழங்குகிறது.
இத் திட்டங்கள் மூலம் கிராமப் புறங்களில் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என உலக வங்கிகூறியுள்ளது.
நிலத்தடி மின் கம்பிகள்:
இந் நிலையில் தமிழகம் முழுவதும் 200 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மின்துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
மேட்டூர் மற்றும் வட சென்னையில் அனல் மின் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம், இதற்காக மத்தியஅரசிடம் நிதியுதவி கேட்டிருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் மாநாகராட்சி பகுதிகளில் பூமிக்கு அடியே மின்சார கேபிள்கள் அமைக்கப்படவுள்ளன.இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத் திட்டத்திற்கு ரூ. 16,000 கோடி செலவாகும் என்றார்.












Click it and Unblock the Notifications