நீதிபதி கண்காணிப்பில் தேர்தல்-அதிமுக வழக்கு
சென்னை:சென்னை மாநகராட்சியின் 98 வார்டுகளுக்கான மறு தேர்தலை ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக அதிமுக தொடர்ந்த வழக்கில்உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து திமுககூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்து விட்டனர்.
இதையடுத்து அங்கு விரைவில் மறு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில், சென்னை மாநகராட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்தன. இதுதொடர்பாகதொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து தற்போது 98 கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்துள்ளனர்.
மாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.ஆளுங்கட்சிக்கு சார்பான தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். தொடர்ந்துபதவியில் நீடிக்கிறார்.
எனவே வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதிமேற்பார்வையில் மறு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், தேர்தல்ஆணையர் அந்த பதவியில் நீடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
7 நிமிடமே நடந்த மாநகராட்சி கூட்டம்:
இந் நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களின் ராஜினாமாவுக்கு மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் இன்று ஒப்புதல் தரப்பட்டது.
இன்று காலை துணை மேயர் சத்யபாமா தலைமையில், மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் கூடியது. அப்போது கூட்டத்தில் 55 கவுன்சிலர்கள்பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட 98 கவுன்சிலர்களின் ராஜினாமா கடிதங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே போல மேயர் தனதுபதவியைை ராஜினாமா செய்ததற்கும் ஒப்புதல் தரப்பட்டது.
அதன் பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 7 நிமிடங்கள் மட்டுமே இன்றைய கூட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications