ஊட்டி மலையிலிருந்து விழுந்து உயிர் தப்பியவர்!
ஊட்டி:ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைச் சிகரத்திலிருந்து 500 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை வாலிபர்படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் தற்கொலை செய்து கொள்ள குதித்தாரா அல்லது தவறி விழுந்தாராஎன்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொட்டபெட்டா மலைப் பகுதி ஆபத்தான பள்ளத்தாக்குகளைக் கொண்டது. இதனால் யாரும் விழுந்து விடாமல்தடுப்பதற்காக இரும்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த கணேசன் (வயது 29) இங்கு வந்தார். அப்போது திடீரென அவர் கம்பிவேலியைத் தாண்டி 500 அடி பள்ளத்தில் விழுந்தார்.
அவர் தற்கொலை செய்யக் குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது தெ>யவில்லை. உடனடியாகஅப்பகுதியில் இருந்த வியாபாரிகள், உள்ளூர்க்காரர்கள் சேர்ந்து கணேசனை மேலே கொண்டு வந்தனர்.
படுகாயத்துடன் இருந்த கணேசன் ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்டடார். அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications