சேலம், வேலூர் ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி
சேலம்:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் வேலூர் மாவட்டம் கீழ் வல்லம் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டுநிகழ்ச்சிகளில் 2 பேர் மாடு முட்டி பலியாயினர்.
சேலம் அருகே உள்ள தம்மம்பட்டி கிராமத்தில், குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுநிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
அதன்படி நடு வீதியில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதைப் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர்.
ஆனால், எந்தவித பாதுகாப்பு வசதிகளும் செய்யாமல் மொத்தமாக ஆட்கள் திரண்டிருக்க அவர்களுக்கு நடுவேகாளைகள் திறந்து விடப்பட்டன. வீதிகளில் ஆட்கள் அலை கடலென திரண்டிருக்க வீடுகளின் மொட்டைமாடிகளிலும் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று ஜல்லிக்கட்டை ரசித்தனர்.
300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை பல இளைஞர்கள்துணிச்சலுடன் அடக்க முயன்றனர். சில காளைகள் யாருக்கும் அடங்காமல் கூட்டத்தினரை தாண்டி ஓடி ஆட்டம்காட்டின.
போட்டி முடியும் நேரத்தில் ஒரு காளை வாடி வாசலை விட்டு வெளியேறிய அடுத்த நிமிடமே கூட்டத்துக்குள்பாய்ந்தது. இளைஞர் கூட்டத்தில் ஏறி மிதித்துப் பாய்ந்த அந்தக் காளையிடம் சிக்கி மணிவேல் என்ற இளைஞர்சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது கழுத்தில் மாடு குத்தியது.
கேரளாவில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த மணிவேல், விடுமுறையில் ஊருக்கு வந்தவராம். நண்பர்களுடன்ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்ப்பதற்காக வந்திருந்தவர் காளை முட்டி இறந்தார். மேலும் 200க்கும் மேற்பட்டார்காயமடைந்தனர்.
இதேபோல வேலூர் மாவட்டம் கீழ் வல்லம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், மனோகரன் என்பவர்இறந்தார். மாடுகள் ஓடி வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் மாடு முட்டி இறந்தார்.
இவர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கிளார்க் ஆக வேலை பார்த்து வந்தார்.












Click it and Unblock the Notifications