ரெய்டை அரசியலாக்கும் விஜய்காந்த்-காங் தாக்கு
சென்னை:வருமான வரி சோதனையை அரசியலாக்கி, ஆதாயம் தேட பார்க்கிறார் விஜயகாந்த் என தமிழக காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருமான வரி துறையினருக்கு ஒரு தகவல் கிடைத்துஅந்த தகவலின் பேரில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிலும், அவரது கல்லூரி, கட்சி அலுவலகத்தில்சோதனை நடைபெற்றது.
இந்த நடவடிக்கைக்கும், அமைச்சர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்த சோதனை நடந்ததே மத்தியநிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கத்திற்குத் தெரியாது. ஆனால் வீணாக அமைச்சர்கள் மீதுவிஜயகாந்த் பழி சுமத்துகிறார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி இந்த சோதனையை அரசியலாக்கி, அதன் மூலம் ஆதாயம் தேட,அனுதாப அலையை உருவாக்கப் பார்க்கிறார் விஜயகாந்த். ஆனால் ஒருபோதும் அது நடக்காது, கனவில் கூடஅது பலிக்காது.
மாநிலப் பிரிவினைக்கு முன்னர் நதிகள் யாருக்கும் சொந்த மில்லாத ஒன்றாக இருந்தன. மாநிலங்கள் பி>க்கப்பட்டபின்னர்தான் நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. தென் மாநில நதிகளை இணைக்க துரிதநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் உயர்நீதிமன்றம் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியபோதிலும், ஜனநாயகமாண்புகளுக்கு மதிப்பு கொடுத்து 99 கவுன்சிலர்களை ராஜினாமா செய்ய சொன்னார் முதல்வர் கருணாநிதி.மக்கள் மீதும், நீதியின் மீதும் அவர் கொண்ட நம்பிக்கையில்தான் இந்த முடிவை எடுத்தார்.
ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் சட்டசபையில் அதிமுகவினர் வெளிநடப்புச் செய்து வருகின்றனர். தேர்தல்ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்றனர். இது பெரும் கேலிக் கூத்தாக உள்ளது என்றார்கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications