தொடரும் விபச்சார வேட்டை: 9 பேர் சிக்கினர்!
சென்னை:சென்னை நகர விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய வேட்டையில், 4 பெண்கள் உள்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் சமீபத்தில் போலீஸார் நடத்திய திடீர் வேட்டையில், டிவி நடிகை ராதிகாஉள்ளிட்ட கும்பல் சிக்கியது. இவர்கள் பங்களாவில் வைத்து விபச்சாரம் செய்தபோது பிடிபட்டனர்.
இவர்களில் டிவி நடிகை ராதிகா ஆபாசப் படத்தில் நடித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவருடன்நடிகை பாபிலோனாவும் ஆபாசப் படங்களில் நடித்துள்ளதாகவும் திடுக்கிடும் புகார் ஒன்றை முரளி என்பவர்போலீஸில் கொடுத்துள்ளார். ஆனால் அந்தப் புகாரை பாபிலோனா மறுத்தார்.
இந்த நிலையில் சென்னை நகரில் போலீஸார் விபச்சாரத் தடுப்பு வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.அவர்களின் தீவிர நடவடிக்கையால், கந்தன்சாவடி பகுதியில் 9 பேர் கொண்ட விபச்சாரக் கும்பல் பிடிபட்டுள்ளது.
சென்னை பெருங்குடி அருகே உள்ள கந்தன்சாவடியில் உள்ள பங்களாவில் விபச்சாரம் நடப்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்தது.
போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த லட்சுமி (வயது 20), ரம்யா (21),செல்வி (20), சந்திரகலா (22) ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களுக்கு உதவியாக இருந்த புரோக்கர்கள் சுந்தரராஜன் (46), அழகன் (42), அல்சன் (வயது 62),பாக்கியராஜ் (20), சின்னாஸ் (42) ஆகியோரும் பிடிபட்டனர்.
அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications