பிறந்தது தமிழ் இன மான மீட்பு இயக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கியுள்ள தமிழ் இன மான மீட்பு இயக்கம் நேறறு தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ் இனமான மீட்பு இயக்கம் என்ற புதிய அமைப்பை ராமதாஸ் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில்மாவட்டத்திற்கு 10 இளைஞர்கள் வீதம் மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கருப்புச் சட்டை, வெள்ளை பேன்ட் சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகஇவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பழமையான நாகரீக வளர்ச்சி, வரலாறு குறித்துஇந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பெரியாரின் கொள்கை பரப்பும் சேவகர்களாக இவர்கள் செயல்படவுள்ளனர். அதேசமயம், கடவுள் மறுப்புக்கொள்கையை மட்டும் இவர்கள் பிரசாரம் செய்ய மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின்பிரச்சினைகளுக்காகவும் இந்த அமைப்பு போராட்டம் நடத்தும்.

இந்த இயக்கத்தின் தொடக்க விழா சென்னை தி.நகரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. பெரியாரியல்அறிஞர் ஆணைமுத்து, முன்னாள் சபாநாயகர் ராஜாராம், திருவாவடுதுறை ஆதீனம் முத்துக்குமாரசாமிதம்பிரான், முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், இரா.செழியன், பாமக தலைவர் ஜி.கே.மணிஉள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

கருப்பு உடையில் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராமதாஸ். நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்,இந்த இயக்கத்தில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும். அறவழியில்போராட்டங்களை நடத்த வேண்டும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

இன்னும் 3 மாத காலத்திற்குள் தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இல்லையென்றால்தமிழ் இன மான மீட்பு இயக்கம் போராட்டம் நடத்தும்.

மத்திய அரசுடன் தற்போது தொடர்பு மொழியாக உள்ளஆங்கிலத்தில் கோப்புகளை அனுப்புகிறோம். அத்துடன்தமிழையும் சேர்த்து அனுப்புங்கள். அரசு உத்தரவுகளை தமிழில் பிறப்பித்து தமிழை ஆட்சி மொழியாகமாற்றுங்கள்.

1ம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை தமிழ் தான் படிப்பு மொழியாக இருக்க வேண்டும். ஒரு பாட மொழியாக 6ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கிலம் இருந்து விட்டுப் போகட்டும். வேறு மொழிகளை கற்கவிரும்புபவர்கள் தனியாக அதை கற்று விட்டுப் போகட்டும்.

நான் படிக்கும்போது 6ம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் பாட மொழியாக இருந்தது. 11ம் வகுப்பு வரைஆங்கிலத்தை மொழிப்பாடமாகத்தான் படித்தேன். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூட அப்படித்தான்படித்தார்.

ஆனால் இன்று காளான்கள் போல ஆங்கிலப் பள்ளிகள் பெருகி விட்டன. இது ஏன்? தமிழ் பயிற்று மொழியாகஇல்லாமல் போய் விட்டது? இவ்வளவு நர்சரி பள்ளிகள் எங்கிருந்து முளைத்தன? தமிழகத்தில் பண்பாடு இல்லைஎன்று சிலர் விமர்சிக்கும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இந்த இயக்கம் சார்பில் விடை காணப் போகிறோம். காண்போம் என்றார்ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+