கோழி குழம்புக்காக மரத்தில் தொங்கிய கைதிகள்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:புதுக்கோட்டை சிறையில் கோழிக் குழம்பு தரக் கோரி மரத்தில் தொங்கி கைதிகள்நூதனப் போராட்டம் நடத்தினர்.

சிறைக் கைதிகளுக்கு வாரந்தோறும் கோழிக் குழம்பு, கறி கொடுக்கும் திட்டத்தைசமீபத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ளசிறைகளில் வாரம் ஒருமுறை கோழிக் குழம்பு வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை சிறையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கோழி வறுவல் தருகிறார்கள்.நேற்றும் அதுபோலவே வறுவல் தரப்பட்டது. ஆனால் 10 கைதிகள் தங்களுக்குகோழிக் குழம்பு தர வேண்டும் என்று கேரி>னர். அதற்கு சிறை அதிகாரிகள், வறுவல்மட்டும்தான், குழம்பு கிடையாது என்றனர்.

இதனால் அதிருப்தியுற்ற அந்த 10 பேரும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறிஅதன் கிளைகளில் தொங்கியபடி போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.

சிறைக்கு வெளியே சென்ற பொதுமக்கள் கைதிகளின் நூதனப் போராட்டத்தை கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். இதையடுத்து கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திஅவர்களை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர் அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+