கிட்னி திருட்டு: டாக்டர்களிடம் டிஐஜி விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:சிறுநீரக திருட்டு தொடர்பாக டாக்டர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஐஜிகுணசீலன் மதுரையில் முகாமிட்டுள்ளார்.

சென்னை எண்ணூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களிடன் வறுமையைப்பயன்படுத்தி சென்னையைச் சேர்ந்த ஒரு கும்பல் சொற்ப பணத்தைக் கொடுத்துசிறுநீரகங்களைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா என்ற பாதிக்கப்பட்டபெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசா>த்து வருகின்றனர். சிபிசிஐடி போலீஸார் தற்போது வழக்கை விசா>த்துவருகின்றனர்.

சிறுநீரக திருட்டு தொடர்பாக சென்னை, திருச்சியைச் சேர்ந்த 3 புரோக்கர்களைபோலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். இதுதவிர சென்னை மற்றும் மதுரையைச்சேர்ந்த 8 முக்கிய மருத்துவமனைகளை போலீஸார் குறி வைத்துள்ளனர்.

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சிலவருடங்களில் மதுரையில்உள்ள 4 முக்கிய மருத்துவனைகளில் 400க்கும் மேற்பட்டோர் சிறுநீரக அறுவைச்சிகிச்சைகளை செய்துள்ளனர்.

இதுபோன்ற அறுவைச் சிகிச்சையின்போது, சிறுநீரகத்தை தானமாக கொடுப்பவர் 1ம்எண் படிவத்திலும், தானமாக பெறுபவர்கள் 2ம் எண் படிவத்திலும் மற்றும் அறுவைச்சிகிச்சை நடத்தப்படும் மருத்துவமனை 3வது எண் படிவத்திலும் முறையாகதகவல்களை எழுதி அதை ஆவணமாக பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மதுரை மருத்துவமனைகளில் இந்த முறை முழுமையாககடைப்பிடிக்கப்படவில்லை. சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களேஇல்லை. இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர்களிடம் கிடுக்கிப்பிடிவிசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சிபிசிஐடி டிஐஜி குணசீலன் மதுரையில் முகாமிட்டுள்ளார். இன்றும்நாளையும் மதுரையில் தங்கியிருக்கும் குணசீலன், ரகசிய இடத்தில் வைத்துசம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் விசாரணை நடத்தவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+