முஹர்ரம் பேரணியில் ராக்கெட் வீச்சு-2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள் நடத்திய முஹர்ரம் ஊர்வலத்தின்போது ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

உலகெங்கும் இன்று முஹர்ரம் அனுசரிக்கப்படுகிறது. கிமு 680ம் ஆண்டு, தற்போதைய இராக்கின் கர்பலா நகரில்நடந்த சண்டையில் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் கொல்லப்பட்டார். இதை முஸ்லீம்கள் முஹரமாகஅனுசரிக்கிறார்கள்.

இதையொட்டி பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டன. பாகிஸ்தான்வட மேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள ஹங்கு என்ற நகரிலும் முஹர்ரம் பேரணி நடந்தது.

கடந்த ஆண்டு இந்த நகரில் நடந்த முஹரம் பேரணியின்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டு 40பேர் பலியானார்கள் என்பதால் இந்த ஆண்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று நடந்த பேரணியின்போது திடீரென ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பெரும் பதட்டம்நிலவி வருகிறது.

சென்னையில்..

சென்னையிலும் இன்று முஸ்லீம்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. இதையொட்டி இன்று காலைராயப்பேட்டையிலிருந்து கருப்பு உடை அணிந்து ஏராளமான முஸ்லீம்கள் பேரணியாக சென்றனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் கத்திகளால் தங்களது உடல்களைக் கீறியபடி சென்றனர். பேரணியையொட்டிபலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+