திருக்கோவிலூர்: வேன் கவிழ்ந்து 3 பேர் பலி
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அருகே வேன் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர் 35 பேர் படுகாயமடைந்தனர்.
திருக்கோவிலூர் அடுத்த சோழவாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த 38 பேர் அருகே உள்ள சித்தலிங்கமடம் என்ற கிராமத்தில் துக்க நிகழ்ச்சிக்கு வேனில்இன்று காலை சென்றனர். வேன் திருக்கோவிலூரை அடுத்த அம்மன் கொல்லைமேடு கிராமம் அருகே வந்தபோது சாலையில் நிலை தடுமாறி அருகேஇருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சம்பயைன் (55), ராணி (35), அஞ்சலை (32) ஆகியோர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 35 பேரும்திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்சுடன் மோதி பற்றி எரிந்த தீப்பெட்டி லாரி
இதற்கிடையே பஸ்சுடன் மோதிய தீப்பெட்டி ஏற்றி வந்த லாரி நடு ரோட்டில் எரிந்து சாம்பலானது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலிருந்து குஜராத் மாநிலத்திற்கு தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.விருதுநகர் மாவட்டம் சிவரக்கோட்டை என்ற இடத்தில் வந்தபோது, எதிர் திசையில் வந்த பேருந்துடன் லாரி மோதியது.
அந்தப் பேருந்து பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தது. இரு வாகனங்களும் மோதிக் கொண்டதில் தீப்பெட்டிகளுடன் வந்தலாரி தீப்பிடித்துக் கொண்டது.
தீப்பெட்டிகள் இருந்ததால் மளமளவென தீ பரவி லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது. தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயைஅணைத்தனர்.
விபத்தில் பேருந்து மற்றும் லாரியின் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்தவர்கள். இந்த சம்பவத்தால் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications