காரில் சீன் படம் பார்த்த மாணவர்கள் கைது!
கோவை:எல்.சி.டி. வசதி செய்யப்பட்ட சொகுசு காருக்குள் அமர்ந்து ஆபாசப் படம் பார்த்த 4 மாணவர்களையும், அதற்கு ஏற்பாடு செய்த ஓட்டுநரையும்போலீஸார் கைது செய்தனர்.
கோவை நகரின் பல இடங்களில் சொகுசு கார்களில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சாலையோரங்களில்கண்ணாடிகளை ஏற்றி விட்டு நிற்கும் சொகுசு கார்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
![]() |
குமரன் மார்க்கெட் பகுதியில் ஒரு கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு வெள்ளை நிற டவேரா சொகுசு கார்நீண்ட நேரம் நிற்பதை போலீசார் கண்டனர். காரின் கண்ணாடிகள் ஏற்றிவிடப்பட்டிருந்தன.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று காருக்குள் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தனர். அதில் சந்திரசேகரன் (22), மணிகண்டன் (22), மணிகண்டா(22), நிர்மல் குமார் (20) ஆகியோர் உள்ளே அமர்ந்து கொண்டு சிறிய டிவி ஸ்கிரீனில் நீலப் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோவிலுக்கு அருகே நடு ரோட்டில் வைத்து காரில் புளு பிலிம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். நான்கு பேரும்கோவை கலைக்கல்லூரி சாலையில், பாப்கார்ன் விற்பனை கடையில் வேலை பார்ப்பவர்கள்.
ஊட்டிக்கு சுற்றுலா செல்ல கடை உரிமையாளர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக சொகுசு காரை வாடகைக்கு அமர்த்தினார்.
சேலத்தில் இருந்து வரும் தங்களது நண்பர்களுக்காக காத்திருந்த போது தான் இவர்கள் போலீசில் பிடிபட்டனர். நான்கு போரும் பேரூரில் உள்ளஒரு கல்லூரியில் பகுதி நேரமாக படித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடர்பாக கார் டிரைவர் பத்மநாபன் (22) என்பவரும் கைது செய்யப்பட்டார். காரில் இருந்த 4 புளூ பிலிம் சிடிக்கள், டி.வி.டி பிளேயர்,புதுப்பட டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.













Click it and Unblock the Notifications