ஈழம்: கருணாநிதி தலைமையில் குழு-கி.வீரமணி
சென்னை:ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைதிக் குழு அமைக்கலாம் என திராவிடர் கழக பொதுச் செயலாளர்கி.வீராமணி மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு மாதத்திற்குள் அமைதித் தீர்வுக்கான புதிய செயல் திட்டம் வகுக்கப்படும் என இலங்கை பிரதமர் கூறியுள்ளார். அதற்கு முன்பு யாழ்ப்பாணம்நெடுஞ்சாலையை திறந்து உலக நாடுகளின் உணவு உதவியை தமிழ் மக்கள் பெற இலங்கை அரசு வழி செய்ய வேண்டும்.
தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். இவை இல்லாமல், எப்படி அமைதித் தீர்வு காண முடியும் என்றுதெரியவில்லை.
ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில், இப்பிரச்சினையை புரிந்த தகுதியுடையவர்களைக் கொண்ட ஒருகுழுவை அமைக்கலாம்.
இதுகுறித்து பிரதமரும், சோனியா காந்தியும் யோசிக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டால், பல்வேறுபிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications