பின் லேடனின் மைத்துனர் சுட்டு கொலை
![]() |
துபாய்:அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடனின் மைத்துனர் மடகாஸ்கரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சவூதியைச் சேர்ந்தவர் ஜமால் கலீபா. இவர் பின் லேடனின் மைத்துனர் ஆவார். மடகாஸ்கரில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்குச்சொந்தமாக வைர சுரங்கமும் உள்ளது.
நேற்று தனது வீட்டில் ஜமால் இருந்தபோது அடையாளம் தெரியாத 30 பேர் வீட்டிற்குள் புகுந்து ஜமாலை சரமாரியாக சுட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் மிதந்த ஜமால், அங்கேயே பிணமானார்.
![]() |
இதுகுறித்து ஜமாலின் சகோதரர் மாலிக் கலீபா துபாயைச் சேர்ந்த அல் அரபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், எனது சகோதரரைச் சுட்டுக்கொன்றவர்கள் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
சகோதரரைக் கொன்று விட்டு வீட்டில் இருந்த அரிய வைரங்கள் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு அவர்கள் சென்று விட்டனர். இதுகுறித்துமுழுமையான தகவல்கள் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
இந்தக் கொலையில் அரசியல் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்றார் அவர். ஜமால், பிலிப்பைன்ஸில் உள்ள அபு சயாப் என்ற தீவிரவாதஇயக்கத்திற்கு பண உதவி அளித்து வந்ததாக ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால் இதை மாலிக் மறுத்துள்ளார். பின் லேடனின் மைத்துனர் என்ற உறவைத் தவிர பின்லேடனுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று அவர் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications