நகைக் கடை அதிபரின் 5 வயது மகன் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் நகைக் கடை அதிபரின் 5 வயது மகன் கடத்தப்பட்டான்.

மணலியில் நகைக் கடை வைத்திருப்பவர் தானா ராம். இவர் அதே பகுதியில் காமராஜர் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர்.

தானா ராமின் 2வது மகன் விமல் (5) அருகே உள்ள மகாத்மா காந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறான். நேற்று முஹர்ரம்பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்பதால் விமல் தனது நண்பர்களுடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால், அவன் வீடுதிரும்பவில்லை.

இரவு 8 மணிவரை விமல் வீடு திரும்பாததால் தானா ராம், மற்றும் அவரது மனைவி ஜக்ரி இருவரும் பல்வேறு இடங்களில் தேடினர். நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் தேடியும் விமல் கிடைக்காததால் தானா ராம் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து போலீசார் தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில், இரு தினங்களுக்கு முன் விமல் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 2 பேர் தானாராமை பற்றியும் அவர் எப்போது கடைக்குச் செல்வார் என்பது குறித்தும் விமலிடம் விசாரித்துள்ளனர். மேலும் அவனிடம் நெருக்கமாகபழகியுள்ளனர் என்றும் தெரிய வந்தது.

இதுகுறித்து விமல் தனது தாயாரிடம் கூறியுள்ளான். ஆனால் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த மர்ம ஆசாமிகள் தான்விமலை கடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விமல் நேற்றிரவு விளையாடிக் கொண்டிருந்த போது 2 பேர் அவனிடம் பேசியதாக அவனோடு விளையாடிய சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் விளையாடி முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போதும் விமல் அங்கேயே நின்று கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+