புலிகளின் கடற்படை தளபதிக்கு இன்டர்போல் குறி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் பிரிவு தலைவரான கர்னல் சூசையை கைது செய்ய சர்வேச போலீஸ் அமைப்பான இன்டர்போல்உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய புலிகள் இயக்கத் தலைவர்களைப் பிடிக்க ஏற்கனவே இன்டர்போல்வாரண்ட்டுகளைப் பிறப்பித்துள்ளது.

Soosai (left) presenting an award

இந் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற் பிரிவான கடல் புலிகள் பிரிவின் தலைவரான கர்னல் சூசையைக் கைது செய்ய இன்டர்போல்வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள இன்டர்போல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கைப் படைகளுக்கு எதிராகவும், மக்களுக்குஎதிராகவும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார் என்ற வகையில் சூசையைப் பிடிக்க உலக அளவிலான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனைப் போல அவரையும் பிடிக்க இன்டர்போல் திட்டமிட்டுள்ளது. வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள் இலங்கையை விட்டுவெளியேறினால் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

பஸ்ஸில் குண்டு-6 போலீசார் பலி:

இதற்கிடையே கொழும்பில் இன்று காலை போலீஸ் பஸ்ஸில் குண்டு வெடித்தில் 6 காவலர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

மட்டக்களப்பு பல்கலைகழகம் முன் இச் சம்பவம் நடந்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலை விடுதலை புலிகள் தான் நடத்தியதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் பிரசாத் சமரசிங்ஹா கூறியுள்ளார்.

இலங்கைக்கு 4.5 பில்லியன் டாலர்:

இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களுக்காக அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நன்கொடையாளர் நாடுகள் 4.5 பில்லியன் டாலர் நிதி அளிப்பதாக உறுதி அளித்துள்ளன.

இலங்கைக்கு நிதியுதவி அளிக்கும் சர்வதேச நன்கொடையாளர் நாடுகளின் மாநாடு காலே நகரில் நடந்தது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில், விடுதலைப் புலிகளுடனான மோதலை இலங்கை அரசு கைவிட்டு விட்டு அமைதி முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் நிதியுதவி அளிப்பது நிறுத்தப்படும் எனஎச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2007-09ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு 4.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க நன்கொடையாளர் நாடுகள் முன்வந்திருப்பதாக இலங்கை அரசுதெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநாட்டின் முடிவில் இலங்கை முதலீட்டுத்து துறைக்கான அமைச்சர் சரத் அமுனுகாமா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

2007-09ம் ஆண்டு காலத்திற்கான இலங்கை வளர்ச்சி திட்டங்களுக்கு 4.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க நன்கொடையாளர் நாடுகள் முன் வந்துள்ளன.

இக் கூட்டத்தில் அடுத்த 10 ஆண்டுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.

அரசியல் பொருளாதாராம், சுனாமி நிவாரணம், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, தீவிரவாதம், அமைதி முயற்சிகள், மனித உரிமைகள், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்டவை குறித்து இந்தகூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அமைதி முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்வதோடு, இனப் பிரச்சினைக்கும் விரைவான தீர்வைக் காண அந்த நாடுகள் வலியுறுத்தின என்றார் அமுனுகாமா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+