மனைவி மருந்துக்கு பணமில்லை-முதியவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:வறுமையின் கொடுமை தாங்க முடியாமலும், மனைவிக்கு மருந்து வாங்கக் கூட பணம் இல்லாததாலும், மனம் வெதும்பிப் போன 52 வயது முதியவர்சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கொருக்குப்பேட்டை செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் சேகர். 52 வயதாகும் இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். சேகர் கூலிவேலை பார்த்து வந்தார். பிரேமாவும் கூலி வேலை பார்த்து வருகிறார்.
பிரேமாவுக்கு சில நாட்களாக உடல் நலம் சரியில்லை. அவருக்கு மருந்து வாங்கக் கூட சேகரிடம் பணம் இல்லை. இதனால் மனம் உடைந்த சேகர்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications