உணவில் பல்லி-மணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
காரைக்கால்:காரைக்கால் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த 40 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
திருநள்ளாரை அடுத்த செல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது மாணவி வாணிஸ்ரீ (11)உணவில் பல்லி கிடந்ததாக கூறினார். சற்று நேரத்தில் அவர் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து ஜாஸ்மின் (9) என்றமாணவியும் வாந்தி எடுத்து மயங்கினார்.
அடுத்தடுத்து மாணவ, மாணவியர் மயங்கியதால் ஆசிரியர்கள் பதட்டமடைந்தனர். மயங்கி விழுந்த 38 மாணவ, மாணவிகளை பரிசோதித்து உரியசிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் இருந்த மாணவிகள் வாணிஸ்ரீ, ஜாஸ்மின் ஆகிய இருவருக்கும் தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவலறிந்த பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம்குறித்து முதன்மை கல்வி அதிகாரி தர்மராஜ் விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications