மது சூதனன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
சென்னை:முன்னாள் அதிமுக அமைச்சர் மதுசூதனன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசனின் மனைவி ராஜகுமாரி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 1997ம் ஆண்டு எனது கணவர் விபத்தில் இறந்தார். இதையடுத்து நான் தனியாக வசித்து வருகிறேன்.
சென்னை அருகே திருவிளங்கோடு என்ற இடத்தில் எனக்குச் சொந்தமாக நிலம் உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் மதுசூதனன், சில ரவுடிகளைவீட்டுக்கு அழைத்து வந்து என்னை மிரட்டி நிலப் பத்திரங்களை பறித்துக் கொண்டு சென்று விட்டார்.
மேலும் அந்த நிலத்தை தனது மனைவி ஜீவா பெயரில் மாற்ற முயற்சித்தார். இதை அறிந்த நான் பத்திரத்துறை அதிகாரிகளிடம் சென்று புகார்தெரிவித்தேன்.
இதனால் கோபமடைந்த மதுசூதனன், மீண்டும் ரவுடிகளுடன் எனது வீட்டுக்கு வந்து கத்தி முனையில் என்னிடமிருந்த 120 பவுன் நகைகளைப்பறித்துக் கொண்டார். மேலும், உன் கணவர் இறந்தது தொடர்பாக சந்தேகம் எழுப்பி பிரச்சினை செய்தால், தொலைத்து விடுவேன், உனதுகணவருக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படும் என்றும் எச்சரித்து விட்டுச் சென்றார்.
அவர் கூறியதை வைத்துப் பார்க்கும்போது எனது கணவர் மரணம் குறித்து சந்தேகமாக உள்ளது. அவரது மரணத்தில் மதுசூதனன்சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.
இதுதொடர்பாக மதுசூதனன் குறித்தும், அவர் பறித்துச் சென்ற நகைகளை மீட்டுத் தரக் கோரியும் போலீஸில் புகார் கொடுத்தேன். பலமுறை புகார்கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு மதுசூதனன் மீது நான் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கைஎடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.என்.பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, ராஜகுமாரியின் புகாரைப் பதிவுசெய்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications