டாஸ்மாக் கடையில் வாலிபர் வெட்டி கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த வாலிபரை 4 பேர் கொண்ட கும்பர் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
மதுரை செல்லூர் சிவன் தெருவை சேர்ந்த முகேஷ் (28), இவர் தனது நண்பர்களுடன் அய்யனார் கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுஅருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் பாருக்குள் நுழைந்து முகேஷ்சை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த முகேஷ் உயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications