தைப்பூசம்: பழனியில் பக்தர்கள் குவிந்தனர்

Subscribe to Oneindia Tamil

பழனி:தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் கூட்டும் அலைமோதுகிறது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் 3வது படை வீடான பழனியில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும்முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றுது.

பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக கோவிலில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று இரவுமுத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

தைப்பூசத்தையொட்டி இன்று காலை மண்டகப்படி நடந்தது. 6 மணிக்கு தீர்த்தவாரியும் நடந்தது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியானதேரோட்டம் இன்று மாலை நடக்க இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. மேலும் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்விடுப்பட்டுள்ளது. தைப்பூச திருவிழாவையொட்டி பழனியல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+