தமிழர் என்பதால் கலாமை விமர்சிப்பதா? ராமதாஸ்
சென்னை:குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்பதால்தான் இனவெறியோடு அவரை விமர்சித்துள்ளார் சிவ சேனா தலைவர் பால் தாக்கரே.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
குடியரசுத் தலைவரும், அலுவல் தொடர்பான அவரது நடவடிக்கைகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை. அதிலும் தனிப்பட்ட முறையிலானவிமர்சனங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
ஆனால் பால் தாக்கரே இதுவரை இல்லாத அளவுக்கு, அப்துல் கலாமை தனிப்பட்ட முறையில், அறுவறுக்கத்தக்க அளவுக்கு விமர்சனம்செய்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அப்சல் குருவின் கருணை மனு மீது அப்துல் கலாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகத்தான் இவ்வாறு விமர்சித்துள்ளார் பால் தாக்கரே.கருணை மனு மீது குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை.
மேலும், கருணை மனு மீதான முடிவை அறிவிப்பது குடியரசுத் தலைவர் என்றாலும், அதற்கான பரிந்துரையை செய்வது மத்திய உள்துறைஅமைச்சகம்தான். இந்த அடிப்படை உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் பால் தாக்கரே, கலாமை விமர்சித்துள்ளார்.
இதற்குக் காரணம், குடியரசுத் தலைவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அதை விட அவர் தமிழர் என்பதும்தான் முக்கியக் காரணம்.
அப்துல் கலாம் முன் அப்சல் குருவின் கருணை மனு மட்டும் பரிசீலனையில் இல்லை. மொத்தம் 24 மனுக்கள் அவரது பரிசீலனையில் உள்ளன.
எதற்கும் வகுப்பு வாத சாயம் பூசி, அரசியலாக்கி, ஆதாயம் தேட முற்படுகிற, இந்துத்துவா அமைப்புகள் அப்சல் குருவின் கருணை மனுவையும்அரசியலாக்க முற்படுவதும், அதில் குடியரசுத் தலைவரைத் தொடர்புப்படுத்தி விமர்சித்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும்.
குடியரசுத் தலைவரை விமர்சித்து அரசியலை தரம் தாழ்த்தி விட வேண்டாம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications