உயிர் பெறும் ராமர் வழிபட்ட பாக். சிவன் கோவில்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் உள்ள, ராமர் வழிபட்ட பழமையான சிவன் கோவில் புத்துயிர் பெறுகிறது.

ராமயாணத்தில், கைகேயி தனது மகன் நாடாள வேண்டும், ராமன் 14 வருடம் வன வாசம் செல்ல வேண்டும் என் கோருகிறாள். இதைத் தட்டாதராமனும், தனது தம்பி லட்சுமணனுடன் 14 வருடங்கள் காட்டில் வாசம் புரிகிறான்.

வனவாசத்தின்போது சில காலம் கடஸ்ராஜ் என்ற இடத்தில் ராமன் தங்கியிருந்ததாக ராமாயணம் கூறுகிறது. அந்த இடம் தற்போது பாகிஸ்தானில்உள்ளது.

இங்குள்ள சிவன் கோவிலில் ராமன் வழிபட்டதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கோவில் இப்போதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

இந்தக் கோவிலைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற பாகிஸ்தான்அரசு ரூ. 6.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. பாகிஸ்தான் தொல்பொருள்துறை, சிவன் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுப்பிக்கும் பணிக்கு சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற பாஜக முன்னாள் தலைவர் அத்வானி அடிக்கல் நாட்டி வைத்தார். தற்போது பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. வருகிற சிவராத்திரியன்று பக்தர்களுக்காக கோவில் திறக்கப்படவுள்ளது.

புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாகவும், கோவிலின் கட்டடம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தவும் 3 பேர் கொண்டபாகிஸ்தான் அரசுக் குழு இந்தியா வந்துள்ளது. இவர்கள் நேற்று அத்வானியை சந்தித்துப் பேசினர்.

அப்போது, திருப்பதி, டெல்லி வைஷ்ணவ தேவி கோவில், குஜராத் மாநிலம் அக்ஷர்தாம் கோவில்களை நேரில் சென்று பார்வையிட்டு கோவில்கட்டடக் கலை நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அத்வானி ஆலோசனை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+