பாலாறு-7ம் தேதி வைகோ போராட்டம்
வாலாஜாபாத்:பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து வேலூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 7ம் தேதிஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தில் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்மாவட்டங்களின் உயிர் நாடிப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்து கோட்டை விட்டுவிட்டது.
இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டவுள்ளது. இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இது நடந்தால் வேலூர்,திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெரும் குடிநீர்ப் பிரச்சினை உருவாகும்.
ஆந்திர அரசின் நடவடிக்கையைக் கண்டித்து வேலூரில் வருகிற 7ம் தேதி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்வைகோ.
சென்னை மாநகராட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு வைகோ பதிலளிக்கையில், 155 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எங்களதுகோரிக்கை. இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையரை மாற்றவும் கோரியுள்ளோம். இதுதொடர்பாக ஜெயலலிதாவுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துமுடிவெடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications