9ம் தேதி சமயபுரம் கோவில் கும்பாபிஷேகம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:திருச்சி அருகே சமயபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புதிதாக வேயப்பட்டுள்ளதங்க கோபுரத்திற்கு வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கோவில் முதன்மை அலுவலரும், மாநில இந்து அறநிலையத் துறை துணை ஆணையாளருமானபி.ஆர்.அசோக் குமார் கூறுகையில், கோவிலின் உயர்ந்த கோபுரமான, ராஜ கோபுரத்திற்கு 71 கிலோதங்கத்தினால் கவசம் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 7.75 கோடிஆகும்.

ஹைதராபாத்திலிருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர்களை கொண்டு இத்தகடுகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாடுகைவினை தொழிலாளர்கள் முன்னேற்ற அமைப்பைச் சேர்ந்த 96 கலைஞர்கள், 3 மாதங்களாக இப்பணியைசெய்து முடித்தனர்.

இதையடுத்து 9ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொள்ளவுள்ளனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு விரிவானஏற்பாடுகள் செய்துள்ளது.

சமயபுரம் கோவிலில், ரூ 10 கோடியில் கோவில் முகப்பு வாயிலில் அமாவாசை மண்டபமும், விருந்தினர்மாளிகை மற்றும் நவீன பேருந்து நிலையமும் விரைவில் அமைக்கப்படவுள்ளன.

விழா நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் திறந்தவெளியில் உறங்குவதைத் தவிர்க்கும் வகையில் இந்தஅமாவாசை மண்டபம் கட்டப்படுகிறது. இங்கு 1500 பக்தர்கள் தங்க முடியும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+