விழுப்புரம்: ஆற்றில் கவிழ்ந்த பஸ்-ஒருவர் பலி
விழுப்புரம்:விழுப்புரம் அருகே பாலத்தை உடைத்துக் கொண்டு அரசு பஸ் ஆற்றில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர்பலியானார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற பஸ் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையிலுள்ள பிடாகம் தென்பெண்ணை சென்று கொண்டிருந்தபோதுதிருச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஒரு கார் எதிரில் வந்தது.
காருக்கு வழி விட டிரைவர் பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், காரின் மீது மோதி பாலத்தின் சுவரைஉடைத்துக்கொண்டு தலைகுப்பற ஆற்றின் உள்ளே கவிழ்ந்தது.
இதில் சேதுராமலிங்கம் (45) என்பவர் அதே இடத்தில் இறந்தார். ஆற்றின் மணல் பாங்கான இடத்தில் பஸ் கவிழ்ந்ததால் பெரும்பாலான பயணிகள்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இருந்தாலும் பாலத்திலிருந்து 20 அடி உயரத்திலிருந்து பஸ் விழுந்ததால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
பஸ் ஆற்றில் கவிழ்ந்ததை பார்த்த அருகில் பாலம் கட்டும் தொழிலாளிகள் பஸ்ஸில் சிக்கிய பயணிகளை காப்பாற்றி சிகிச்சைக்காகமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications