புதுகோட்டை அருகே ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருமயம்:புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 2 பேர் பலியானார்கள்.
திருமயம் அருகே உள்ள மலையக்கோவில் கிராமத்தில் தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. எந்தவித முன்னேற்பாடுகள், பாதுகாப்புவசதிகள் இல்லாமல் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டின்போது, மாடுகளைப் பிடிக்க முயன்ற பலர் படுகாயமடைந்தனர்.
இதில் சுப்பையா (வயது 55), கலியன் (வயது 60) ஆகியோர் மாடுகள் முட்டி படுகாயமடைந்து இறந்தனர். இந்த ஆண்டு புதுக்கோட்டைமாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்களில் மொத்தம் 7 பேர் இறந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications