மும்பையில் கட்டட சுவர் இடிந்து 19 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை:மும்பையில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை அருகே நவி மும்பையில், குதாரி என்ற கிராமத்தில், பல்லா என்ற இடத்தில், புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியில்ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கட்டுமானம் நடந்து வரும் பகுதியிலேயே தங்கியிருக்கின்றனர்.
நேற்று பிற்பகலில் அங்கிருந்து பெரிய சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 19பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். மொத்தம் 26 பேர் அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் பான்வெல் மற்றும் மும்பை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications