தேர்தல் எதிரொலி: ரவுடி வேட்டை தொடங்கியது
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலைத் தொடர்ந்து சென்னை நகரில் ரவுடிகளை பிடிக்கும் வேலையில் காவல்துறை குதித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு வருகிற 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் பெருமளவில் வன்முறைகள்நடந்தன. திறந்து விடப்பட்ட ரவுடிகள்தான் இந்த கலவரத்தை ஏற்படுத்தினர் என்று அதிமுகஉள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் மறு தேர்தலை எந்தவித வன்முறைச் சம்பவங்களும் இல்லாமல், அமைதியாக நடத்தி முடிக்க காவல்துறை நடவடிக்கைஎடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னை நகரில் உள்ள ரவுடிகளைப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 700 ரவுடிகள் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரவு பகலாக ரவுடிகளைப் பிடிக்கும் வேலையில் போலீஸார் இறங்கியுள்ளனர். கீழ்ப்பாக்கத்தில் பிரசாந்த் என்ற ரவுடியைப் பிடிக்க போலீஸார்முயன்றபோது அவர் தப்பி ஓடினார். அதில் மாடி ஒன்றிலிருந்து குதித்தபோது அவரது கால் முறிந்தது.












Click it and Unblock the Notifications