கலாமை மீண்டும் சீண்டும் பால் தாக்கேரே
மும்பை:குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்து மீண்டும் காட்டமாக பேசி தனது வக்கிரத்தைக் காட்டியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசுகையில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்துதனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தாக்கரேவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெ>வித்துள்ளன. தமிழகத் தலைவர்களான வைகோ,ராமதாஸ் உள்ளிட்டவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தனது பேச்சில் தப்பே இல்லை என்று தாக்கரே கூறியுள்ளார். மேலும், கலாமை மறுபடியும் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரஉள்ளாட்சித் தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் தாக்கரே பேசினார்.
அப்போது கலாம் குறித்து தான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார். அவர் கூறுகையில், நான் என்ன தவறாக சொல்லி விட்டேன்?நான் ஒரு கார்ட்டூனிஸ்ட். ஒருவரின் தலைமுடியைப் பற்றி கருத்து சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
நாங்களும் சேர்ந்துதான் கலாமை குடியரசுத் தலைவராக்கினோம். ஆனால் அந்தப் பதவிக்கு உரிய வகையில் அவர் செயல்படுகிறாரா என்றால்இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
முகம்மது அப்சலுக்கு அக்டோபர் மாதமே தூக்குத் தண்டனைக்கு தேதி குறிக்கப்பட்டு விட்டது. ஆனால் அது தொடர்பான கருணை மனு இன்னும்அப்துல் கலாமின் மேசையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதை நான் குறிப்பிட்டுச் சொன்னதில் எந்தத்தவறும் இல்லை என்று கூறினார் தாக்கரே.












Click it and Unblock the Notifications