பெற்ற மகளை விபச்சாரக் கும்பலிடம் விற்ற தாய்!
திருப்பதி:ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே 10 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற மகளை விபச்சாரக் கும்பலிடம் விற்ற தாயையும், அதற்கு ஏற்பாடு செய்தபுரோக்கரையும் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பதி அருகே உள்ள முலகலசெருவு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி ருத்ரம்மா. இவர் தனது 15 வயது மகள் அனிதா மற்றும் பாலம்மா,சுஜாதா ஆகியோருடன் அனந்தப்பூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்தார்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த ரயில்வே போலீஸார் அழைத்து விசாரித்தனர். அப்போது தனது மகள் அனிதாவை, பாலம்மா, சுஜாதாஆகியோரிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டதும், விபச்சாரக் கும்பலிடம் ஒப்படைக்க அனிதாவை அழைத்துச் செல்லக் காத்திருந்ததும்தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸாரிடம், ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். அனிதாவை அவர்களிடமிருந்து மீட்ட போலீஸார் காப்பகத்திற்குஅனுப்பினர். லட்சுமி ருத்ரம்மாவையும், விபச்சாரக் கும்பலிடம் அனிதாவை விற்க ஏற்பாடுசெய்த புரோக்கரையும் போலீஸார் கைது செய்தனர்.
பெற்ற மகளையே விபச்சாரத்திற்கு விற்ற தாயின் செயல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications