இயேசு சிலையில் ரத்தம்: வேலூரில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:வேலூரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் உள்ள இயேசு நாதர் சிலையில் ரத்தக்கறை இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்துவாச்சாரி பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இங்குள்ள இயேசு நாதர் சிலையில் ரத்தக்கறை காணப்பட்டதைக் கண்டு பக்தர்கள்அதிர்ச்சி அடைந்தனர்.
சிலையின் தலை முதல் பாதம் வரை ரத்தத்தால் அபிஷேகம் செய்தது போல கறை காணப்பட்டது. ரத்தக் கறை உறைந்த நிலையில் இருந்தது கண்டுஅங்கு வந்தவர்கள் பங்குத் தந்தையிடம் தெரிவித்தனர். அவரும் வந்து பார்த்து விட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
யார் இதைச் செய்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications