சென்னை- பாஜக 43 இடங்களில் மட்டும் போட்டி
சென்னை:சென்னை மாநகராட்சிக்கு நடக்கும் மறு தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.
வரும் 18ம் தேதி 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இந் நிலையில் போட்டியிடுவதா வேண்டாமா என்று ரொம்பவே யோசித்து கடைசியில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளது பாஜக.இப்போது 43 வார்டுகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதன் மூலம் தேர்தல் நடக்கும் பாதி வார்டுகளில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. இக் கட்சி தனித்துப் போட்யிடுவது குறிப்பிடத்தக்கது.
பாமக-13 பேருக்கும் மீண்டும் சீட்:
இந் நிலையில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் பாமக சார்பில் மீண்டும் போட்டியிட, ராஜினாமா செய்த 13 கவுன்சிலர்களுக்கும் வாய்ப்புதரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் 13 பாமக வேட்பாளர்களின் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணிவெளியிட்டார்.
ஏற்கனவே கவுன்சிலர்களாக இருந்து ராஜினாமா செய்த 13 பேருமே மீண்டும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்கள் விவரம்:
வார்டு 19-ராஜேந்திரன், 45-சாந்தலட்சுமி ஸ்ரீராம், 55-தங்கராசு, 64-பி.கே.சேகர், 67-ஏழுமலை, 80-தி.ஏழுமலை, 102-பாலகிருஷ்ணன், 125-இரா.பிரகாஷ், 131- வெங்கடேசன், 134-த.ச.மூர்த்தி, 137- பிரேமா சக்கரபாணி, 142-செயராமன், 149-ஜமுனா கேசவன்.












Click it and Unblock the Notifications