தமிழக பஸ்கள நிறுத்தம், லாரிகளும் வரவில்லை
ஒசூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் கர்நாடகத்துக்குள் இன்று தமிழக லாரிகள் நுழையவில்லை.அவை அனைத்தும் ஒசூருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.
அதே போல பெங்களூரையொட்டிய தமிழக பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பல தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. மிகக் குறைவானபஸ்களே இயங்கின.
அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து 8 மணிக்கு மேல் அரசு பஸ் ஏதும் பெங்களூருக்கோ, மைசூருக்கோ வரவில்லை. பெங்களூர் வந்த பஸ்கள்ஒசூரோடு நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் சனி, ஞாயிறையொட்டி தமிழகத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதே போல தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கிளம்பிய லாரிகள் ஒசூரில் நின்றிருப்பதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போது ஒசூருக்கு முன்பாகவே லாரிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் பெங்களூரில் எங்கு திரும்பினாலும் தீர்ப்பு வந்தாச்சா.. தீர்ப்பு வந்தாச்சா என்ற பேச்சாகவே இருந்தது.












Click it and Unblock the Notifications