பஸ் எரிப்பு வழக்கு: 15ம் தேதி தீர்ப்பு
சேலம்:கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் பஸ்ஸோடு எரிக்கப்பட்ட வழக்கில் வருகிற 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிஅறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகம் -முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில்குதித்தனர்.
இதில் தர்மபுரி அருகே, கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் வந்த பேருந்தை தடுத்து நிறுத்திய அதிமுகவினர் பஸ்ஸில்பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர்.
இதில், கோகிலவாணி உள்ளிட்ட 3 மாணவிகள் உயிரோடு எரிந்து இறந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவைச்சேர்ந்த மாது உள்ளிட்ட 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட கைது செய்யப்பட்டனர்.
முதலில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. ஆனால் அதிமுக அரசு குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் வகையில், வழக்கைநடத்தி வருவதாகவும், வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றுமாறும் கோரி கோகிலவாணியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சேலம் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இங்கு நடந்து வந்த விசாரணை இன்று, அரசுத் தரப்பு வாதத்துடன் முடிவுக்கு வந்தது.இதையடுத்து வருகிற 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணராஜா அறிவித்தார்.












Click it and Unblock the Notifications