விமானம் தாமதம்: பயணிகள் கொந்தளிப்பு
சென்னை:சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானம் கிளம்ப பெரும் தாமதம் ஆனதால், கோபமடைந்த பயணிகள் விமான நிலையத்தில்போராட்டத்தில் குதித்தனர்.
சனிக்கிழமை மாலை சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இந்தியன் விமானத்தில் பயணிக்க பயணிகள் காத்திருந்தனர். புறப்படும் நேரமாகியமாலை 6.10 நெருங்கியும் விமானம் புறப்படுவதாக தெரியவில்லை.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், புறப்படத் தாமதமாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் விமானம்புறப்படுவதாகத் தெரியவில்லை. சுமார் ஒரு மணி நேரமாக காத்திருந்த பயணிகள் பொறுமை இழந்தனர்.
இரவு 9.30 மணியாகியும் மாற்று ஏற்பாட்டுக்கான வழியும் தெரியாததால் கொதிப்படைந்தனர். அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த 95 பேரும்,இந்தியன் நிறுவனத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களை இந்தியன் நிறுவன அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இறுதியாக நள்ளிரவு 12 மணிக்கு, டெல்லியிலிருந்து சென்னை திரும்பியவிமானம் மூலம் அனைத்துப் பயணிகளும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications