3 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தென்காசி:தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறந்து வந்ததால் வாழ்க்கையில் வெறுப்புற்ற நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு பெண், 3பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலக்கடையநல்லூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி விவசாயி. இவரது மனைவி பாக்கியம் (28). இவர்களுக்கு கார்த்திகா (6), கவுரி (4), ஒன்றரை மாதகுழந்தை ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தன.

மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், வேதனையடைந்த பாக்கியம், இவர்களை எப்படி வளர்த்து ஆளாக்குவது என புலம்பியபடிஇருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை அவர் கொடிக்குறிச்சியில் உள்ள தனது தங்கை மாலா வீட் டிற்கு சென்றுள்ளார். அங்கே இருந்த கிணற்றுக்குச் சென்றபாக்கியம், தனது 3 குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.

பின்னர் அருகேயுள்ள பூவரசம் மரத்தின் கிளையில் தனது சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் பாக்கியத்தின் பிணத்தையும், கிணற்றில் மிதந்த 3 குழந்தைகளின் பிணங்களையும் பார்த்துபோலிஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

அச்சன்புதூர் போலீசார் விரைந்து வந்து பாக்கியம் மற்றும் குழந்தைகள் உடலை மீட்டனர். 4 உடல்களும் தென்காசி அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+