கன்டெய்னர்-லாரி மோதல்: 6000 கோழிகள் பலி
சென்னை:சென்னை அருகே பனி மூட்டம் காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மினி லாரிமோதியதில், அதில் இருந்த 6000 கோழிகள் பரிதாபமாக இறந்தன. லாரி ஓட்டுநர் பலியானார், கிளீனர்படுகாயமடைந்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து நேற்று அதிகாலை 6 ஆயிரம் கறிக் கோழிகளை ஏற்றிக் கொண்டு மினிலாரி சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. சுப்ரமணி என்பவர் லாரியை ஓட்டினார்.
பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்க்குப்பம் பகுதியில் லாரி வந்தபோது எதிரே பனிமூட்டம் கடுமையாகஇருந்தது. இதனால் எதிரே செல்லும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை.
இந்த நிலையில் எதிரே போய்க் கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம், கோழிகளுடன் வந்த மினிலாரி பயங்கரமாக மோதியது. இதில் லாரி ஓட்டுநர் சுப்ரமணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மினி லாரியில் இருந்த 6000 கோழிகளும் பரிதாபமாக இறந்தன. சாலை முழுவதும் கோழிகளின் நசுங்கியஉடல்கள் கிடந்தது படு கோரமாக இருந்தது. கிளீனர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.












Click it and Unblock the Notifications