சென்னை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் முடிந்தது
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு வருகிற 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கானவேட்பு மனு தாக்கல் கடந்த 29ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல்முடிவடைந்தது.
கடைசி நாளில் மட்டும் 200 பேர் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 400 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
140வது வார்டில் போட்டியிடும் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம் மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்துவேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இன்று மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. 8ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்றேவேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாகிறது.
இந்தத் தேர்தலில் தி.க கூட்டணிக் கட்சிகள் தவிர பாஜக, தேமுதிக ஆகிய இரு பெரிய கட்சிகள் மட்டுமேபோட்டியிடுகின்றன. தேமுதிக 100 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. அதிமுகவும், மதிமுகவும் தேர்தலைப்புறக்கணித்து விட்டன.












Click it and Unblock the Notifications