சென்னை விரைகிறார் ஜோஸ்-கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அதிருப்தியும், பரபரப்பும் நிலவும் நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர்சைபுதீன் சோஸ் இன்று மாலை சென்னை வருகிறார். முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்கள் மற்றும் இரு மாநில அமைச்சர்களுக்கு இடையே சோஸ்முன்னிலையில் டெல்லியில் இருமுறை பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியாகி தமிழக காவிரிப்பாசனப் பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல கர்நாடகத்திலும் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இந்தப் பின்னணியில் சோஸ் இன்று மாலை சென்னை வருகிறார். முதல்வர்கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார்.
பெரும் பரபரப்பான சூழலின் பின்னணியில் ஜோஸ் சென்னைக்கு வருவதும், முதல்வர் கருணாநிதியை சந்திக்க உள்ளதும் முக்கியத்துவம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications