தரம் குறைந்த நகை: மனைவியுடன் ஆசாரி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:நகை செய்யக் கொடுத்தவர் தரம் குறைந்ததால் போலீஸில் புகார் செய்யப் போவதாக மிரட்டியதால் பயந்துபோன நகை ஆசாரியும், அவரது மனைவியும் விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 50). இவரது மனைவிவேலம்மாள் (45). வேலு நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவர்களுக்கு 21 வயதில் கார்த்திக், 18வயதில் முத்து, 13 வயதில் மகேஷ்வரி என 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு நள்ளிரவுக்கு மேல் வேலுவின் குழந்தைகள் எதேச்சையாக கண் விழித்துப் பார்த்தபோது தாயும்,தந்தையும் உயிருக்குப் போராடுவதைப் பார்த்து அதிர்ந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் துணையுடன் பெற்றோர்களை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்துபோயினர்.

இருவரும் திராவகம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்கொலைக்குமுன்பு வேலு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அதில், சமீபத்தில் என்னிடம் ஒருவர் நகை செய்யக் கொடுத்திருந்தார். அதன் மாற்று சற்றே குறைந்திருந்ததால்,கோபமடைந்த அவர் போலீஸில் புகார் செய்யப் போவதாக மிரட்டினார். இதனால் தற்கொலை செய்துகொள்கிறோம். இதற்கு யாரும் பொறுப்பில்லை என்று எழுதப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+