அமெரிக்க போர் விமானத்தில் பறக்கும் டாடா!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரூ:பெங்களூரில் நடைபெறவுள்ள ஏரோ இந்தியா 2007, விமான கண்காட்சியின்போது, டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அமெரிக்காவின்எப்-16 ரக போர் விமானத்தில் பறக்கவுள்ளார்.
![]() |
விமானியான ரத்தன் டாடாவுக்கு ஹெலிகாப்டர்கள், விமானங்களில் பறப்பது தான் பொழுதுபோக்கு. குறிப்பாக போர் விமானங்கள்,ஹெலிகாப்டர்களை அதிகம் விரும்புவார்.
பல ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் இருந்து அமெரிக்காவுக்கு மிராஜ் போர் விமானத்தில் பறந்தார்.
![]() |
இந் நிலையில் பெங்களூரூ அருகே எலஹங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 9ம் தேதி ஏரோ இந்தியா விமானக் கண்காட்சி தொடங்குகிறது.இந்தக் கண்காட்சியைப் பார்வையிட வரும் ரத்தன் டாடா அன்றைய தினம் எப் 16 ரக போர் விமானத்தில் பறக்கவுள்ளார்.
இரு விமானிகள் பயணம் செய்யக் கூடிய அந்த விமானத்தில் துணை விமானியாக டாடா பறக்கவுள்ளார்.
இந்திய விமானக் கண்காட்சியில் அமெரிக்க போர் விமானங்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவில் முதன் முதலில் விமான போக்குவரத்தைத் தொடங்கியது டாடா குடும்பம்தான் என்பது நினைவிருக்கலாம்.














Click it and Unblock the Notifications