பெங்களூரில் பீதி கலந்த அமைதி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு:பெங்களூரில் இன்று பெரும் பீதியுடன் அமைதி நிலவியது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையடுத்து நேற்று பிற்பகலில் ஆரம்பித்த பதற்றம் இன்னும் ஓயவில்லை. நாளை மறுதினம் பந்த் நடத்தப் போவதாககன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

இன்று நகரில் ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போலீசார் ரோந்து சுற்றிய வண்ணம் உள்ளனர்.

பன்னரகட்டா சாலையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனம் மீது சிலர் இன்று கல் வீசினர். அலுவலகத்தை மூடுமாறு கோஷமிட்டனர். இதையடுத்துஊழியர்கள் பின் வாசல் வழியாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

அதே போல ராஜாஜி நகர் உள்பட சில இடங்களிலும் கல் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. மாண்டிா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் பஸ்கள்மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந் நிலையில் இன்று நடப்பதாக இருந்த கர்நாடக அமைச்சரவைக் கூட்டமும் அனைத்துக் கட்சிக் கூட்டமும் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எம்எல்ஏ ஒருவர் மறைந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாளை மறுதினம் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள், தனியார், அரசு அலுவலகங்கள் மூடப்படவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+