பர்ஸனல் லோன்-கிரெடிட் கார்டு வட்டி அதிகரிப்பு
மும்பை:தனி நபர் கடனாக அதிக தொகை வாங்குவோர், இனி அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். அதே போல கிரெடிட் கார்டு மீதும் வட்டியைஉயர்த்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
தனி நபர் கடன் நிலையான வட்டி வீதத்தில் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் தவணை முறையில் தரப்படுகிறது. வருமானஅடிப்படையில் தனி நபர் கடன் வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.
இந் நிலையில் அதிக தொகையை பர்ஸனல் லோனாக பொறுவோரிடமிருந்து அதிக வட்டியும், குறைந்த தொகை வாங்குவோரிடமிருந்து ஓரிருசதவீதம் குறைவாகவும் வட்டி வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் தனி நபர் கடன் வட்டி 2 முதல் 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
அத்துடன் தனி நபர் கடன் பெறுவதை அதிகரிக்க சில வங்கிகள் அளித்து வந்த இலவச பரிசுகளும் இனி இருக்காது.
இதைப் போலவே, கிரெடிட் கார்டில் கடன் பாக்கி மீது இப்போதே 24 % முதல் 36 % வட்டி வசூலிக்கின்றன. அதை 40 % ஆக உயர்த்த வங்கிகள்ஆலோசித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications