கர்நாடக தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவம்:மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதனால்கர்நாடகத்தில் பதட்டம் நிலவுகிறது. அங்குள்ள தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அங்கு மத்திய போலீஸாரையும், துணை ராணுவத்தையும்அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக நாளைமறுநாளைக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications