இறுதித் தீர்ப்பில் கூடுதல் நீர்: கருணாநிதி
சென்னை:காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை விட கூடுதலாகவே இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு ஆறுதல் தருகிறது என்று நான் சொன்னதை, மகிழ்ச்சி தருகிறது என்று அர்த்தப்படுத்திக் கொண்டு, ஜெயலலிதா அறிக்கைவிட்டது மாத்திரமல்லாமல்,
நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தண்ணீர் அளவு குறைவாகக் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இடைக்காலத் தீர்ப்பின்படி மேட்டூர் அணைக்கு 205 டிஎம்சி தண்ணீர் வர வேண்டும். இதில் புதுச்சேரிக்கு 6 டிஎம்சி போக மீதம் 199 டிஎம்சிதண்ணீர்தான் கிடைத்தது.
தற்போது வெளியாகியுள்ள இறுதித் தீர்ப்பில், பில்லிகுண்டுவில் 192 டிஎம்சி தண்ணீர் விடப்பட வேண்டும். அங்கிருந்து மேட்டூருக்கு இடையில்கிடைக்கக் கூடிய 25 டிஎம்சி தண்ணீரையும் சேர்த்தால், மேட்டூரில் 217 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இதில் புதுச்சேரிக்கு 7 போக மீதம் 210 டிஎம்சிதண்ணீர் தமிழகத்திற்குக் கிடைக்கும்.
இது எப்படி இடைக்காலத் தீர்ப்பை விட இறுதித் தீர்ப்பிலே குறைந்து விட்டது என்று பொருளாகும்?
இந்த இறுதித் தீர்ப்பை ஏற்க முடியாத தீர்ப்பு என்று கூறியுள்ள ஜெயலலிதா, இத் தீர்ப்பை தாமதமின்றி மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்என்று கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications